Saturday, June 14, 2008

சில கவிதைகள்

கவிதை-1
சில்லறையாய்
தராததால்
கொட்டிய
வார்த்தைகளைக் கொண்டு
பிம்பமொன்றை
கட்டினாள் என்னுள்
அவள் திமிர்க்காரி என்று.

பிறகொரு நாள்..

யாசகம் கேட்கும்
பெரியவரிடம்
அன்பொழுகக்கேட்கிறாள் அவள்

'என்னங்கப்பா வேணும்'

எளிதில் பார்த்திட முடியா இடத்திலும்
பூக்கத்தான் பூக்கின்றன பூக்கள்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை-2

கடிதத்தின்

வெற்றிடத்தில்

உதிர்ந்திருந்த

ஒற்றைத்துளி மை

உணர்த்திற்று

காத்திருப்பை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கவிதை-3

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!







***

கவிதை-4

முழுமை

பாதி உயிரை
ஆதியில் தந்தான் ...

மீதியை ,
காதல் தந்தது !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை-5

இதுவாகவும் .. இதுபோலவும் !


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்
தொலைக்கவிருந்த என் அடையாளங்களை
மீட்டுக்கொடுத்தது - உன் பிரிவு !



many thanks,

For those u wrote this superb collections aand the people who are going to read it.

makka

No comments: